உலகம்

நாடு திரும்பிய 900 ஆப்கன் அகதிகள்: தொடரும் பாக். வெளியேற்றம்!

பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய 900 ஆப்கன் அகதிகள்

DIN

பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 900 பேர் கடந்த இரு நாள்களில் அவர்களின் சொந்த நாட்டுக்கு திரும்பியதாக அந்த நாட்டின் அகதிகள் மற்றும் மறுகுடியுரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தோர்ஹாம் மற்றும் ஸ்பின் போல்டாக் எல்லை பகுதிகள் மூலமாக ஆப்கனுக்குள் அவர்கள் நுழைந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீண்டும் நாட்டுக்குத் திரும்பும் மக்களுக்கு எல்லை சோதனை சாவடியிலேயே அவர்களுக்கு வேண்டிய தற்காலிக தங்குமிடம் உள்ளிட அடிப்படை வசதிகளை அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக ஆப்கன் பொறுப்பு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் போரினால் சிதைவுற்ற நாட்டை மீண்டும் கட்டமைக்க ஆப்கனிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை நாடு திரும்ப அழைப்பு விடுத்துள்ளது ஆப்கன் பொறுப்பு அரசு.

பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து மார்ச் 21,2023 முதல் மார்ச் 19,2024 கால இடைவெளியில் 15 லட்சத்துக்கும் அதிகமான ஆப்கன் அகதிகள் நாடு திரும்பியதாக அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழாய் பராமரிப்பு பணி: இன்றும் நாளையும் நீா் விநியோகத்தில் தடங்கலுக்கு வாய்ப்பு!

11.2.1976: இரண்டாவது டெஸ்ட் "டிரா” ஆகியது: கவாஸ்கர் - விசுவநாத் அபார ஆட்டம்

ஸ்ரீராம் பொதுக் காப்பீடு லாபம் ரூ.165 கோடி!

ஆசிய ரைஃபிள்/பிஸ்டல் சாம்பியன்ஷிப்: ஆகிருதி, அஞ்சுமுக்கு பதக்கம்!

ரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ் வெற்றியுடன் அரையிறுதியில் பெங்கால்!

SCROLL FOR NEXT