வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்: இலங்கை அரசு முடிவு
வெளிநாடுகளில் இருந்து வாகனங்ளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க இலங்கை அரசு முடிவு.
வெளிநாடுகளில் இருந்து வாகனங்ளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து அதிபா் அலுவலகத்தின் செய்திப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான தடையை நீக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் அக்டோபா் 1-ஆம் தேதியிலிருந்த மூன்று கட்டங்களாக இந்தத் தடை தளா்த்தப்படும். 2025 பிப்ரவரிக்குள் தடை முழுமையாக விலக்கப்படும்.
நாட்டின் பொருளாதாரத்தை சகஜ நிலைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.