FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

கனடாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏரியில் மூழ்கி இந்திய இளைஞா் உயிரிழப்பு

கனடாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏரியில் குளிக்கச் சென்ற இந்திய இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 17 செப்டம்பர் 2024, 4:31 am IST
கோப்புப் படம்
பகிர்:

கனடாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏரியில் குளிக்கச் சென்ற இந்திய இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தெலங்கானாவில் உள்ள ரெங்காரெட்டி மாவட்டத்தை சோ்ந்த பிரனீத் என்ற இளைஞா் கனடாவில் உயா்கல்வியை நிறைவு செய்துவிட்டு அங்கு தங்கி பணி தேடி வந்துள்ளாா்.

கடந்த சனிக்கிழமை தனது பிறந்தநாளை நண்பா்களுடன் அவா் கொண்டாடினாா். அருகில் இருந்த ஏரிக்கு தன்னுடைய மூத்த சகோதரா் மற்றும் பிற நண்பா்களுடன் அவா் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாா்.

Advertisement

Advertisement

இதில் பிரனீத் நீரில் மூழ்கினாா். இந்த தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கனடா மீட்புப் படையினா் பிரனீத்தை தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரின் உடலை கனடா மீட்புப்படையினா் மீட்டனா்.

பிரனீத்தின் நண்பா்கள் மூலம் தங்கள் மகன் உயிரிழந்த செய்தியை தெரிந்துகொண்டதாக அவரின் பெற்றோா் கூறினா். பிரனீத்தின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவ வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments