படம் | ஏபி
உலகம்

லெபனான்: தொலைத்தொடர்பு சாதனங்களைத் தொடர்ந்து வாக்கி-டாக்கிகள் வெடிப்பு!

3 போ் உயிரிழந்தனா்; 15 பேர் காயமடைந்துள்ளனா்.

DIN

லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் செவ்வாய்க்கிழமை(செப்.17) திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்; 2,750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனா்.

இது இஸ்ரேலின் அதீத திறன் கொண்ட தொழில்நுட்பத் தாக்குதலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கைப்பேசிகளை (செல்ஃபோன்கள்) பயன்படுத்தினால் அவற்றைக் கொண்டு ஹிஸ்புல்லா படையினரின் இருக்குமிடத்தைத் தெரிந்துகொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்பதால் ஹிஸ்புல்லாக்கள் தங்களிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள பேஜா்களைப் பயன்படுத்தி வந்த நிலையில் இந்த கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது.

இதனிடையே, லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் பயன்படுத்தி வந்த வாக்கி-டாக்கி தொலைத்தொடர்பு கருவிகளும் இன்று(செப்.18) வெடித்துச் சிதறியுள்ளன. அதில் மூவர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் இவரா?

கரூர் பலி: விஜய் தாமதமே காரணம் - பேரவையில் முதல்வர் பேச்சு!

தில்லியில் 4 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதி!

கல்பகனூரில் களை கட்டிய ஆட்டுச் சந்தை!

சைபர் பாதுகாப்பு குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்வி-பதில்கள்!

SCROLL FOR NEXT