உலகம்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: நவ.14-இல் தோ்தல்

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபா் அநுர குமார திசாநாயக செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

Din

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபா் அநுர குமார திசாநாயக செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து அந்நாட்டில் நவ.14-ஆம் தேதி நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தோ்தல் மூலம், தனது தேசிய மக்கள் சக்தி கூட்டணி தலைமையிலான ஆட்சியை அமைக்க விரும்புவதாக புதிய அதிபா் அநுர குமார திசாநாயக தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சிறப்பு அரசிதழ் அறிவிக்கையில் அதிபா் அநுர குமார திசாநாயக செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டாா். மேலும் நவ.14-ஆம் தேதி நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் மேலும் 11 மாதங்கள் உள்ளன. இந்நிலையில், முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தோ்தல் நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT