பனிச்சரிவில் சிக்கி மாயமான நேபாள மலையேற்ற வீரர்கள்: தேடுதல் பணி நிறுத்தம்!
நேபாள மலையேற்ற வீரர்கள் கதி என்ன?
காத்மாண்டு: உலகின் உயரமான மலைச் சிகரங்களில் 10-ஆவது பெரிய சிகரமான நேபாளத்திலுள்ள அன்னப்பூர்ணா மலைச் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 2 மலையேற்ற வீரர்களை தேடும் பணி நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் சனிக்கிழமை(ஏப். 12) தெரிவித்தனர்.
சுமார் 26,500 அடி(8,091 மீட்டர்) உயரமுள்ள அன்னப்பூர்ணா மலைச் சிகரத்தில் ஏறுவது கடினமான சவாலாக மலையேற்ற வீரர்களுக்கு உள்ளது. இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தைவிட அன்னப்பூர்ணா சிகரம் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படும் அபாயப் பகுதியாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜிமா டாஷி ஷேர்பா, ரீமா ரிஞ்ச் ஷேர்பா ஆகிய இரு மலையேற்ற வழிகாட்டிகளும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சுமந்துகொண்டு மலையில் ஏறும்போது கடந்த திங்கள்கிழமையன்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இது குறித்த தகவல் கிடைத்தவுடன், அவ்விருவரையும் தேடும் பணி கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்தது. மாயமான இருவரையும் வான்வெளியிலிருந்தும் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், இதுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து, வீரர்களை தேடும் பணி நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.