இஸ்ரேல் பிரதமருடன் இந்தியத் தூதர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இந்தியத் தூதர் இடையிலான சந்திப்பு குறித்து...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ஜே.பி. சிங் மற்றும் இந்தியப் பத்திரிகையாளர்கள் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, ஜெருசலேமிலுள்ள அவரது அலுவலகத்தில், அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ஜே.பி. சிங், இன்று (ஆக.7) நேரில் சந்தித்து உரையாடினார்.
இந்தச் சந்திப்பில், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில், இஸ்ரேல் மற்றும் இந்தியா இடையிலான ஒத்துழைப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, பிரதமர் நெதன்யாகு, அவரது அலுவலகத்துக்குச் சென்றிருந்த இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களை சந்தித்ததுடன், அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மியான்மர் அதிபர் காலமானார்!
Israeli Prime Minister Benjamin Netanyahu, Indian Ambassador to the country J.P. Singh and Indian journalists met and spoke in person.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.