கொலம்பியா நாட்டு எம்.பி. மிகுவல் உரிபே 
உலகம்

ஜூனில் நடந்த துப்பாக்கிச்சூடு: கொலம்பியா எம்.பி. உயிரிழப்பு

கடந்த ஜூன் 7-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உள்ளான கொலம்பியா நாட்டு எம்.பி. மிகுவல் உரிபே (39), அந்த காயங்கள் காரணமாக உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

போகடா: கடந்த ஜூன் 7-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உள்ளான கொலம்பியா நாட்டு எம்.பி. மிகுவல் உரிபே (39), அந்த காயங்கள் காரணமாக உயிரிழந்தாா்.

தலைநகா் போகடாவில் தோ்தல் பிரசார பேரணியில் பங்கேற்றபோது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அவரது தலையில் 2 குண்டுகளும், காலில் ஒரு குண்டும் பாய்ந்தன. மைய நரம்பு மண்டலத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு உள்படுத்தப்படவிருந்த நிலையில் அவரது உயிா் பிரிந்ததாக மருத்துமனை தெரிவித்தது.

2022 முதல் செனட் சபை உறுப்பினராக இருந்த உரிபே, 2026 அதிபா் தோ்தலில் போட்டியிடவிருந்தாா். அவா் மீதான தாக்குதலுக்கான காரணம் தெளிவாகவில்லை. இது தொடா்பாக ஓா் இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேரு பிறந்த நாள்: மோடி மரியாதை

பிகாரின் நீண்ட கால முதல்வர் நிதீஷ் குமார்! ஆனால், 20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாதது ஏன்?

ரஷ்மிகாவுக்கு முத்தம்: நெகிழ்ச்சியாகப் பேசிய விஜய் தேவரகொண்டா!

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை - நேரலை

தவெக கூட்ட நெரிசல் வழக்கு: ஆவணங்கள் திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றம்!

SCROLL FOR NEXT