மியான்மரில் மருத்துவமனையின் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர் AP
உலகம்

மியான்மரில் மருத்துவமனை மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்! 34 பேர் பலி

மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மியான்மர் நாட்டில், நள்ளிரவில் மருத்துவமனையின் மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மியான்மரில், ராணுவ அரசுக்கு எதிராக அராக்கன் ஆயுதக்குழு உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றது. இதையடுத்து, அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அமைந்திருந்த பொது மருத்துவமனையின், ராணுவப் படைகள் நேற்று (டிச. 10) இரவு வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவமனையின் மீது போர் விமானங்கள் மூலம் 2 குண்டுகள் வீசப்பட்டதாக, உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில், 17 பெண்கள் உள்பட 34 பேர் கொல்லப்பட்டதாகவும், 80 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தாக்குதலில் மருத்துவமனையின் கட்டடம் சேதமடைந்துள்ளது குறித்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்தத் தாக்குதல் பற்றி, மியான்மரின் ராணுவ அரசு எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடவில்லை.

முன்னதாக, மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதனால், ஜனநாயகத்தை ஆதரிக்கும் படைகளுக்கும், ராணுவத்துக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்க குடியுரிமை ரூ. 9 கோடி: டிரம்ப் விளக்கம்!

In Myanmar, 34 people have been killed in an airstrike carried out by the military on a hospital at midnight.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சௌதி திரைப்பட விழாவில்! முதல் ரோஹிங்கியா படத்துக்கு விருது!

கொல்கத்தாவில் Messi - ஷாருக்கான் சந்திப்பு!

போர்க்களமான சால்ட் லேக் திடல்..! ஊழல் நடந்ததாக மெஸ்ஸி ரசிகர்கள் போராட்டம்!

தனது 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்துவைத்த Messi

நாட்டில் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடுவோர் எத்தனை லட்சம்?

SCROLL FOR NEXT