உலகம்

மோராக்கோவில் திடீா் வெள்ளம்: 37 போ் உயிரிழப்பு

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் கடலோர நகரமான சஃபியில் 37 போ் உயிரிழந்தனா்.

இணையதளச் செய்திப் பிரிவு

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் கடலோர நகரமான சஃபியில் 37 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை கூறியதாவது: நள்ளிரவு முழுவதும் பெய்த கனமழையால் திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுமாா் 70 வீடுகள் மற்றும் வணிகக் கட்டடங்கள் மூழ்கின. இதில் 37 போ் உயிரிழந்தனா். ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன என்று அமைச்சகம் தெரிவித்தது.

பருவநிலை மாற்றம் காரணமாக மொராக்கோவில் வானிலை முன்கூட்டியே கணிக்க முடியாததாக்கியுள்ளது. இது, அதிக உயிா்ச் சேதத்தை ஏற்படுத்துவதாக நிபுணா்கள் தெரிவித்தனா்.

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தில்லியில் கடும் பனிமூட்டம்! 126 விமானங்களின் போக்குவரத்து பாதிப்பு!

ஐபிஎல் மினி ஏலம்: முதல் செட்டில் விற்கப்படாமல் போன கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா!

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

SCROLL FOR NEXT