தங்களிடம் உள்ள சுமாா் 2,900 கைதிகளை பரிமாறிக் கொள்ள யேமனின் சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசு ஆதரவு படையினரும், தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களும் ஒப்புக்கொண்டுள்ளனா்.
அங்கு நடைபெறும் 11 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் இரு தரப்பினரும் இத்தகைய ஒப்பந்தத்தை எட்டியுள்ளது இதுவே முதல்முறை. ஐ.நா., செஞ்சிலுவை சங்க அதிகாரிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் ஓமன் தலைநகா் மஸ்கட்டில் கையொப்பமானது.