திபெத் பகுதியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள். AP
உலகம்

நேபாள - திபெத் நிலநடுக்கம்: 32 பேர் பலி!

திபெத்தில் நிலநடுக்கத்தால் 32 பேர் உயிரிழந்தது பற்றி...

DIN

நேபாளம் - திபெத் எல்லையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 32 பேர் உயிரிழந்ததாக சீனா அறிவித்துள்ளது.

சீன எல்லைக்குள்பட்ட திபெத் - நேபாளம் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக் கோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது சீனாவில் திபெத் பகுதிகள், இந்தியாவில் பிகார் மற்றும் வட மாநிலங்களில் உணரப்பட்டது.

திபெத் பகுதிகளில் பல கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்ததாகவும் இதுவரை 32 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் பதிவாகவில்லை.

நேபாளம் - திபெத் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமானது என்றாலும், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் 200 கி.மீ. சுற்றளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

SCROLL FOR NEXT