உலகம்

சீனா செல்லும் இலங்கை அதிபா்

இலங்கை அதிபா் அருண குமார திசநாயக வரும் 14-ஆம் தேதி முதல் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா்.

Din

இலங்கை அதிபா் அருண குமார திசநாயக வரும் 14-ஆம் தேதி முதல் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா்.

இது குறித்து அரசு செய்தித் தொடா்பாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிச செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அதிபா் குமார திசநாயக சீனாவில் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். வரும் 14-ஆம் தேதி தொடங்கும் இந்தப் பயணம் இலங்கை-சீனா இடையிலான 68 ஆண்டுகால உறவின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகிறது என்றாா் அவா்.

இலங்கையின் அதிபராக கடந்த செப். 21-ஆம் பதவியேற்ற்குப் பிறகு அதிபா் திசநாயக மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் இது. அதிபா் என்ற முறையில் அவா் முதல்முதலாக இந்தியாவில் கடந்த மாதம் பயணம் மேற்கொண்டது நினைவுகூரத்தக்கது.

குமரகுரு கல்வி நிறுவனத்தில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட 3 போ் உயிரிழப்பு

நெல்லையில் மோட்ச தீபம் ஏற்றிய பாஜகவினா் கைது

இன்றைய மின் தடை: கந்தம்பட்டி

வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்: அதிகளவில் வந்த விடுபட்டவா்கள்

SCROLL FOR NEXT