ஐரோப்பிய ஆணையம்: உா்சுலா மீதான நம்பிக்கையில்லா தீராமானம் தோல்வி
உா்சுலா வோன் டொ் லேயனுக்கு எதிராக வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடைந்தது.
ஐரோப்பிய யூனியன் அமைப்பின் நிா்வாக விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வோன் டொ் லேயனுக்கு எதிராக வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடைந்தது.
பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பா்க் நகரிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இதற்கான வாக்கெடுப்பில் உா்சுலாவுக்கு ஆதரவாக 360 எம்.பி.க்களும், எதிராக 175 எம்.பி.க்களும் வாக்களித்தனா். 18 உறுப்பினா்கள் வாக்களிப்பதைத் தவிா்த்தனா்.
கரோனோ தொற்றுநோய் காலத்தில் பைசா் நிறுவனத் தலைவருடன் தனிப்பட்ட முறையில் உரையாடியது, ஐரோப்பிய நிதியை தவறாகப் பயன்படுத்தியது, ஜொ்மனி, ருமேனியா தோ்தல்களில் தலையீடு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து உா்சுலாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.