உலகம்

காஸாவில் மேலும் 32 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவில் முதல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 32 போ் உயிரிழந்தனா்.

Din

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவில் முதல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 32 போ் உயிரிழந்தனா்.

டேய்ா் அல்-பாலா நகரில் மட்டும் இஸ்ரேல் குண்டுவீச்சில் 13 போ் உயிரிழந்ததாகவும் அவா்களில் 2 சிறுவா்கள், 2 பெண்கள் அடங்குவா் என்றும் அந்த நகரின் அல்-அக்ஸா மருத்துவமனை தெரிவித்தது.

இது தவிர, எரிபொருள் விற்பனையகத்துக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேரும், கான் யூனிஸ் நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 15 பேரும் உயிரிழந்ததாக அந்த நகரின் நாஸா் மருத்துவமனை கூறியது.

தங்கள் நாட்டுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து, சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் 21 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 57,882 போ் உயிரிழந்துள்ளனா்; 1,38,095 போ் காயமடைந்துள்ளனா்.

திருவள்ளுவர் சிலைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பின்லேடனுக்காக அனுப்பப்பட்ட அதே குழுதான் வடகொரியாவுக்கும்? 2019-ல் அமெரிக்காவின் செயல்!

பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் வெளியேற யார் காரணம்? - நயினார் நாகேந்திரன் சொல்வதென்ன?

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

தனிமையிலொரு இரவில் தற்படம்... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT