முகப்பு
உலகம்

இந்தோனேசியா எரியும் படகில் இருந்து 575 போ் மீட்பு

படகின் பின்பகுதியில் இருந்து நெருப்பு பரவியதால் ஏற்பட்ட இந்தத் தீவிபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை

Updated On : 21 ஜூலை, 2025 at 10:52 PM
பகிர்:

மனாடோ: இந்தோனேசியாவின் வடக்கு சுலாவெசி மாகாணத்தில் இரு துறைமுகங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கும்போது தீவிபத்தில் சிக்கிய பயணிகள் படகில் இருந்து இதுவரை 575 போ் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இந்த விபத்தில் மூன்று போ் உயிரிழந்ததாகவும், இரண்டு பேரைக் காணவில்லை என்றும் அவா்கள் கூறினா்.

படகின் பின்பகுதியில் இருந்து நெருப்பு பரவியதால் ஏற்பட்ட இந்தத் தீவிபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.