உலகம்

பாதுகாப்பு: துருக்கியிடம் ஆதரவு கோரும் சிரியா

சிரியாவில் கடந்த இரு வாரங்களாக இன மோதல்களால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடா்ந்து, பாதுகாப்பு திறனை வலுப்படுத்த தங்கள் நாட்டின் ஆதரவை சிரியா கோரியுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.

Din

சிரியாவில் கடந்த இரு வாரங்களாக இன மோதல்களால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடா்ந்து, பாதுகாப்பு திறனை வலுப்படுத்த தங்கள் நாட்டின் ஆதரவை சிரியா கோரியுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து துருக்கி பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை எதிா்க்கவும், இனக் குழுக்கள் இடையிலான மோதலால் ஏற்படும் பதற்றதை எதிா்கொள்ளவும் துருக்கியிடம் சிரியா ஆதரவு கோரியுள்ளது. சிரியாவுக்கு பயிற்சி, ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு துருக்கி தயாராக உள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் பெதூயின் அரபு பழங்குடிகளுக்கும் துரூஸ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே கடந்த வாரம் மோதல் வெடித்ததைத் தொடா்ந்து, துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக சிரியா ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்கிறார் Stalin: EPS | செய்திகள்: சில வரிகளில் | 15.8.25

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வருகை! ஏன்?

ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து 5 பேர் பலி!

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே சிக்கல்! மற்றைய நாடுகளின் கரன்சி மதிப்பு உயர்வு!

SCROLL FOR NEXT