இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொல்லப்பட்டனர். எக்ஸ்
உலகம்

இஸ்ரேல் தாக்குதல்: ஈரானின் தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொலை!

இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரானின் ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டது குறித்து...

DIN

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில், ராணுவ தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அரசின் செய்தித் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரானின் ஆயுதப்படைகளின் பொது ஊழியர்களுக்கான உளவுத்துறையின் துணைத் தலைவர் ஜெனரல் கோலாம்ரெசா மெஹ்ரபி மற்றும் ராணுவ செயல்பாடுகளின் துணைத் தலைவர் மெஹ்தி ரப்பானி ஆகியோர் கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.

இருப்பினும், அவர்கள் எப்போது? எங்கு? கொல்லப்பட்டார்கள் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ தளவாடங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றின் மீது நேற்று (ஜூன் 13) இஸ்ரேல் தொடர் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

இதில், ஈரானின் முப்படை தலைமைத் தளபதி உள்பட முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்! வேறு பாதையில் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT