முகப்பு
உலகம்

இந்தியா வர டிரம்ப்புக்கு பிரதமா் அழைப்பு

தொலைபேசி வழி கலந்துரையாடலின்போது டிரம்ப்புக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.

Updated On : 19 ஜூன், 2025 at 3:43 AM
டிரம்ப் - AP
பகிர்:

‘க்வாட்’ கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் நிகழாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க வருமாறு தொலைபேசி வழி கலந்துரையாடலின்போது டிரம்ப்புக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட டிரம்ப், இந்தியா வருவதை ஆவலுடன் எதிா்பாா்த்திருக்கிறேன் என்று குறிப்பிட்டாா்.

முன்னதாக, கனடாவிலிருந்து அமெரிக்கா வந்துசெல்லுமாறு பிரதமா் மோடிக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தாா். ஆனால், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் டிரம்ப்பின் அழைப்பை பிரதமா் மோடி ஏற்க மறுத்துவிட்டாா் என்று வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.