நைஜிரியா தற்கொலைத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!
நைஜிரியா தற்கொலைத் தாக்குதல் பற்றி...
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில், பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவத்துக்கு உதவிவந்த ஆயுதக் குழுவினா் 20 போ் உயிரிழந்தனா்.
தொடா்ந்து பெய்துவந்த கனமழையைப் பயன்படுத்தி ஆயுதக் குழுவினா் இருந்த உணவு விடுதிக்குள்நுழைந்த பெண் பயங்கரவாதி இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. போகோ ஹராம் அல்லது மேற்கு ஆப்பிரிக்காவுக்கான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.