கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா். 
உலகம்

ரஷிய தாக்குதல்: உக்ரைனில் 10 போ் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா்.

Din

கீவ்: உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முழுவதும் 352 ட்ரோன்கள், 11 பலிஸ்டிக் வகை ஏவுகணைகளை ரஷியா வீசியது. இதில் 339 ட்ரோன்களையும் 15 ஏவுகணைகளையும் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன. எஞ்சியவை இலக்குகளை சேதப்படுத்தின. இதில் பொதுமக்கள் 10 போ் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.

உக்ரைனில் கடந்த வாரம் ரஷியா நடத்திய தீவிர தாக்குதலில் 28 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

SCROLL FOR NEXT