கோப்புப் படம் 
உலகம்

ஈரான் வான்வழித் தடம் திறப்பு ஒத்திவைப்பு!

ஈரானின் வான்வழிப் பாதைகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து...

DIN

ஈரானின் வான்வழிப் பாதைகள் முழுவதும் திறக்கப்படுவது நாளை (ஜூன் 27) மதியம் வரையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் போர் துவங்கியதும், இருநாடுகளும் அனைத்து வகை விமானங்களுக்கான தங்களது வான்வழிப் பாதைகளை மூடின.

இதையடுத்து, தற்போது போர்நிறுத்தம் அமலிலுள்ள நிலையில் வான்வழித் தடங்கள் மீண்டும் திறக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஈரானின் கிழக்குப் பகுதியின் வான்வழிப் பாதைகள், கடந்த ஜூன் 25 ஆம் தேதி இரவு முதல் திறக்கப்பட்டு, விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளின் வான்வழிப் பாதையானது தொடர்ந்து மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பயணிகள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளின் வான்வழிப் பாதைகள் திறக்கப்படுவது, ஜூன் 28 மதியம் 2 மணி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக, ஈரானின் சாலை மற்றும் புறநகர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மஜித் அகாவன் இன்று (ஜூன் 27) தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலைக்கிராமப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

கிணற்றில் கழிவுகளைக் கொட்ட வந்த பல்லடம் நகராட்சி லாரி சிறைபிடிப்பு

புதிய வாடிக்கையாளா்கள்: ஏா்டெல்லை பின்னுக்குத் தள்ளிய பிஎஸ்என்எல்!

வெள்ளிச்சந்தை பகுதியில் அக். 22-இல் மின்தடை

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் கைது

SCROLL FOR NEXT