குண்டுவீச்சில் சேதமடைந்த ஒரு வீடு. 
உலகம்

சொந்த நாட்டில் குண்டு வீசிய தென் கொரிய போா் விமானம்

தென் கொரியாவைச் சோ்ந்த போா் விமானம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசியதில் 8 போ் காயமடைந்தனா்.

Din

அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியின்போது தென் கொரியாவைச் சோ்ந்த போா் விமானம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசியதில் 8 போ் காயமடைந்தனா்.

இது குறித்து விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரிய போா் விமானங்கள் வியாழக்கிழமை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அப்போது இரு கேஎஃப்-16 வகை போா் விமானங்களில் பொருத்தப்பட்டிருந்த எட்டு எம்கே-82 ரக குண்டுகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தவறுதலாக வீசப்பட்டது. இதில் எட்டு போ் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், குண்டுவீச்சின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவும் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT