மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் எரிந்து சேதமடைந்த கார்கள்.  
உலகம்

ரஷியாவில் 337 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

ரஷியா மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்.

DIN

ரஷியாவில் தாக்குதல் நடத்த உக்ரைனால் அனுப்பப்பட்ட 337 ட்ரோன்களை ரஷிய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷியாவுடனான மூன்று ஆண்டுக்கால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சவுதி அரேபியாவில் அமெரிக்காவின் சிறப்புத் தூதருடன் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் ரஷியா மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷியாவின் எல்லையைச் சுற்றியுள்ள 10 பகுதிகளில் 337 ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது.

இதில், ஒருவர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

கர்ஸ்க், மாஸ்கோ, பெல்கோரோட், ப்ரியன்ஸ்க், வோரோன்ஸே, கலுகா, ஒர்யோல் போன்ற பல பகுதிகளில் தாக்குதல் நடத்திய ட்ரோன்கள் அனைத்தையும் ரஷிய பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

இந்தத் தாக்குதலில் பல கட்டிடங்கள், குடியிருப்புப் பகுதிகள் சேதமடைந்தன. பல வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதுதொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் 6 விமான நிலையங்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவின் ரயில் நிலையங்களிலும் போக்க்குவரத்து சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும், மாஸ்கோவைச் சுற்றி தாக்குதல் நடைபெற்ற சில பகுதிகளின் பெயரை ரஷிய பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT