FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஆசியாவில் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு பாகிஸ்தானா?

ஆசியாவில் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு பாகிஸ்தான் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Updated On : 24 மார்ச் 2025, 3:26 pm IST
பாகிஸ்தான் மக்கள்
பகிர்:

தெற்காசிய நாடுகளில், வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு என்ற பட்டியலில் பாகிஸ்தான் ஏற்கனவே முதலிடத்தைப் பிடித்திருந்த நிலையில், கடுமையான பணவீக்கம் காரணமாக தற்போது ஆசிய நாடுகளிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு என்ற பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துவிட்டது.

பல்வேறு மோசமான காரணங்களால் பாகிஸ்தான் பெயர் எப்போதும் அடிபடுவது வழக்கம்தான். அந்த வகையில்தான் தற்போது முதலிடம் பிடித்திருந்தாலும் அதனைக் கொண்டாட முடியாத நிலையில் உள்ளது. அந்த நாடு. காரணம், இந்தப் பெயருக்கும் புகழுக்கும் காரணமே விலைவாசி உயர்வுதானே.

ஆசிய மேம்பாட்டு வங்கி (ஏடிபி) நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. 25 சதவீதம் என்ற அளவில் அந்நாட்டில் பணவீக்கம் உள்ளது. இதனால், ஆசியாவிலேயே, வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

Advertisement

Advertisement

பிலிப்பைன்ஸ தலைநகர் மணிலாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஏடிபி வங்கியின் ஆய்வு முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில், ஆசிய கண்டத்தில் உள்ள 46 நாடுகளில் பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் கடுமையாக இருப்பதாகவும், அடுத்த நிதியாண்டிலாவது 15 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் 250 மில்லியன் மக்கள் தொகையில் 98 மில்லியன் பாகிஸ்தான் மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ்தான் வாழ்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments