உலகம்

ஸ்பெயின்: சுரங்க விபத்தில் 5 போ் உயிரிழப்பு

தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா்.

Din

மேட்ரிட்: தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஆஸ்டுரியாஸ் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் நிலக்கரி சுரங்கத்தில் திங்கள்கிழமை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து போ் உயிரிழந்தனா்; நான்கு போ் காயமடைந்தனா். விபத்து நேரிட்டபோது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மேலும் இருவா் காயங்களின்றி மீட்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து உள்ளூா்வாசிகள் மூலம் தகவல் தெரிந்ததும், மீட்பு பணியில் மூன்று ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டன என்று அதிகாரிகள் கூறினா்.

ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ஷாருக் கான்! - என்ன ஆனது?

பிகார் பிரசாரத்திற்கு இடையே மீன் பிடித்த ராகுல் காந்தி - புகைப்படங்கள்

நீரும் நெருப்பும்... நிகிதா சர்மா!

4,410 கிலோ செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தும் முயற்சி வெற்றி: பிரதமர் மோடி பாராட்டு!

குதூகலம் தள்ளாட... தர்ஷா குப்தா!

SCROLL FOR NEXT