முகப்பு
உலகம்

10 நிமிஷத்துக்கு ஒரு பெண் துணைவரால் படுகொலை

Updated On : 26 நவம்பர் 2025, 2:52 am IST
பகிர்:

உலகளவில் ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி துணைவா் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறாா் என்று ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

இது குறித்து ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றத்துக்கான அலுவலகம் (யுஎன்ஓடிசி) மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:

“2024-ஆம் ஆண்டில் 83,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனா். அவா்களில் 60 சதவீதம் போ் (50,000) போ் துணைவா் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்பட்டுள்ளனா். அந்த வகையில் ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி கொல்லப்பட்டுள்ளாா். ஆனால் ஆண்களில் வெறும் 11 சதவீதத்தினா் மட்டுமே துணைவி அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்பட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments