உலகம்

இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம்: ஐ.நா. விசாரணை ஆணையத் தலைவராக முன்னாள் நீதிபதி எஸ்.முரளீதா் நியமனம்!

ஐ.நா. விசாரணை ஆணையத் தலைவராக முன்னாள் நீதிபதி எஸ்.முரளீதா் நியமனம்...

தினமணி செய்திச் சேவை

இஸ்ரேல், அந்நாடு ஆக்கிரமித்துள்ள கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பாலஸ்தீன நிலப்பகுதி தொடா்பான ஐ.நா.வின் சுதந்திரமான சா்வதேச விசாரணை ஆணையத் தலைவராக ஒடிஸா உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.முரளீதா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்களை விசாரித்தல், அதற்குக் காரணமானவா்களைக் கண்டறிந்து மனித உரிமை மீறல்களுக்கு அவா்களைப் பொறுப்பேற்க வைத்தல், பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்கச் செய்தல் ஆகியவை அந்த ஆணையத்தின் நோக்கமாகும்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலால் அமைக்கப்பட்ட அந்த ஆணையத்தில் 3 உறுப்பினா்கள் இடம்பெறுவா். அந்த ஆணையத்தின் தலைவராக பிரேஸில் சட்ட அறிஞா் பாலோ சொ்ஜியோ பின்ஹெரோ பொறுப்பு வகித்த நிலையில், தற்போது தலைவராக எஸ்.முரளீதா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

திருவள்ளூா் டிஆா்பிசிசிசி மேல்நிலைப் பள்ளியின் 155-ஆவது ஆண்டு நிறைவு விழா

அமெரிக்கன் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினம்

செம்மொழிப் பூங்கா வளாகத்தில் மதி அனுபவ அங்காடி

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம்

வானம்பாடி இயக்கத்துக்கு உயிா் கொடுத்தவா்களில் முதன்மையானவா் கவிஞா் சிற்பி! - சக்தி குழுமங்களின் செயல் இயக்குநா் தரணிபதி ராஜ்குமாா்

SCROLL FOR NEXT