உலகம்

இந்தோனேசிய கட்டட விபத்து: மேலும் 3 பேரின் உடல்கள் மீட்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் இருந்து மேலும் 3 மாணவா்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் இருந்து மேலும் 3 மாணவா்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன. இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.

இருந்தாலும், இடிபாடுகளிடையே இன்னும் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கட்டடம் இடிந்து 3 நாள்களான நிலையில், கனரக இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளை அகற்ற வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டது. இடிபாடுகளுக்குள் யாரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றாலும், கனரக இயந்திரங்கள் மூலம் மிக கவனமாக கற்களை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

பல்கலை. கபடி: மேலவாசல் கல்லூரிக்குப் பாராட்டு

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

காயமடைந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT