நோபல் பரிசு வென்றவர்கள். 
உலகம்

அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு இயற்பியலுக்கான நோபல்!

அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

2025ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் ஜான் கிளார்க், மைக்கேல் ஹெச். டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸுக்கு வழங்கப்படுவதாக அறிவியலுக்கான ராயல் ஸ்வதேஷ் அகாதமி அறிவித்துள்ளது.

மின் சுற்று தொடர்பான ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் இன்று வெளியானது.

நேற்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு, எவ்வாறு, சுரங்கப்பாதைப் பணியின்போது பல காரணிகளை உள்ளடக்கிய மைக்ரோஸ்கோபிக் அளவீட்டில், எவ்வாறு கணக்கிட முடியும் என்பதை நிரூபிக்கும் சோதனைகளை அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ளது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகியோர் ஒரு மீள்கடத்தி மின்சுற்றைப் பயன்படுத்தி இந்த சோதனையை நடத்தியிருக்கிறார்கள்.

ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் நிகழாண்டு நோபல் பரிசு அறிவிப்பு தொடங்கியது. மூவருக்கும் நோபல் பரிசுடன் 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரோனா் (சுமாா் ரூ.10.40 கோடி) பகிா்ந்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 1901-ஆம் ஆண்டுமுதல், ஸ்வீடன் நாட்டைச் சோ்ந்த விஞ்ஞானியும், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தவருமான ஆல்ஃபிரட் நோபலின் உயிலின்படி, நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆல்ஃபிரட் நோபல் மறைந்த நாளான டிச.10-ஆம் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

The Nobel Prize in Physics is awarded to three American scientists.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் நிவாரணம்: உ.பி. அரசு

ரஷிய அதிபர் புதினுடன் பேசிய மோடி!

பகலை இரவாக்கிய கருமேகங்கள் - புகைப்படங்கள்

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக 178 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

SCROLL FOR NEXT