ரண்தீா் ஜெய்ஸ்வால் 
உலகம்

ரஷிய எண்ணெய் இறக்குமதி: அமெரிக்கத் தடையின் தாக்கங்களை ஆராயும் இந்தியா - வெளியுறவு அமைச்சகம்

தினமணி செய்திச் சேவை

ரஷியாவின் லுக்ஆயில், ரோஸ்னெஃப்ட் ஆகிய இரு பெரும் எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் சமீபத்திய தடையால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து இந்தியா ஆராய்ந்து வருவதாக, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவிடம் இருந்து மானிய விலையிலான கச்சா எண்ணெய் கொள்முதலை படிப்படியாகக் குறைப்பதுடன், அமெரிக்காவிடம் இருந்து பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி செய்வது குறித்து இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கத் தடைக்கு பிறகு மேற்கண்ட நிறுவனங்களிடம் இருந்து புதிய கொள்முதலுக்கான நடைமுறையை இந்திய நிறுவனங்கள் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் சமீபத்திய தடையின் தாக்கங்கள் குறித்து இந்தியா ஆராய்ந்து வருகிறது. உலகளாவிய சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப நமது முடிவுகள் இயல்பாக மேற்கொள்ளப்படுகின்றன. 140 கோடி குடிமக்களின் எரிசக்தி தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், பல்வேறு நாடுகளில் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதே நன்கு அறியப்பட்ட நமது நிலைப்பாடாகும்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருதரப்பும் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளன என்றாா் அவா்.

ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தும் என்று கடந்த சில வாரங்களாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

சாபஹாா் துறைமுகம்-விதிவிலக்கு நீட்டிப்பு:

ஈரானில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்பட்டு வரும் சாபஹாா் துறைமுகத்துக்கு அமெரிக்கா கடந்த மாதம் பொருளாதாரத் தடை விதித்தது.

இருதரப்பும் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின் துறைமுக செயல்பாடுகளைத் தொடர இந்தியாவுக்கு ஒரு மாத காலம் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த விதிவிலக்கை, மேலும் 6 மாதங்களுக்கு அமெரிக்கா நீட்டித்துள்ளதாக ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

SCROLL FOR NEXT