ஜெருசலேமில் பயங்கரவாத தாக்குதல்: 6 பேர் பலி! பிரதமர் மோடி கடும் கண்டனம்!
இஸ்ரேலின் ஜெருசலேமில் பயங்கரவாதிகள் தாக்குதல்...
இஸ்ரேலின் ஜெருசலேமில் பயங்கரவாதிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 -ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தக் கொடூர தாக்குதலுக்கு உலகளவில் கண்டனம் எழுந்துள்ளது. இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்து தமது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “ஜெருசலேமில் இன்று அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை நாங்கள் தெரிவிக்கிறோம். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறோம்.
எந்தவிதத்தில் பயங்கரவாதம் நடந்தாலும் அதனை இந்தியா கண்டிக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான, அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாதென்ற கொள்கையில் இந்தியா உறுதியாக நிற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
PM Modi Strongly condemn the heinous terrorist attack on innocent civilians in Jerusalem
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.