ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!
ஜெரூசலேமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றி...
ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் திங்கள்கிழமை கொல்லப்பட்டனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தலைநகர் ஜெரூசலேமில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணியளவில் ஓடும் பேருந்தில் ஏறிய இரண்டு பயங்கரவாதிகள், பயணிகள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும் இந்த தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகளையும் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு ஹமாஸ் படையினர் உடனடியாக சரணடைய வேண்டும், இல்லையெனில் அழிக்கப்படுவீர்கள் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
Four people were killed in a terrorist shooting in Jerusalem on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.