AP
உலகம்

ரஷியாவிலுள்ள ஆயிரக்கணக்கான உக்ரைன் குழந்தைகளை எப்போது மீட்கப் போகிறோம்? -ஸெலென்ஸ்கி

உக்ரைனிலிருந்து ரஷிய படைகளால் நாடு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளை மீட்க உடனடி நடவடிக்கை அவசியம்: ஸெலென்ஸ்கி

இணையதளச் செய்திப் பிரிவு

உக்ரைனிலிருந்து ரஷிய படைகளால் நாடு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளை எப்போது மீட்கப் போகிறோம்? என்று உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி வினவியுள்ளார்.

இது குறித்து நியூயாா்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமா்வு பொது விவாதத்தில் புதன்கிழமை(செப். 24) ஸெலென்ஸ்கி பேசும்போது: “எங்கள் நாட்டின் மீதான ரஷியாவின் போர் நீடிக்கிறது. இதனால் இன்றளவும் வாரவாரம் மக்கள் உயிரிழப்பைச் சந்திக்கின்றனர். எனினும், போர்நிறுத்தம் ஏற்படவில்லை. காரணம், ரஷியா. ரஷியா போர்நிறுத்தத்தை நிராகரித்து வருகிறது.

ஆயிரக்காணக்கான உக்ரைன் குழந்தைகளை ரஷியா கடத்திச் சென்றுள்ளது. அவர்களில் சிலரை மட்டுமே மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். உதவிய அனைவருக்குமே நன்றியை உரித்தாக்குகிறேன். ஆனால், அவர்கள் அனைவரையும் மீட்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்? அவர்களை நாம் மீட்பதற்குள் தங்கள் குழந்தைப் பருவத்தை அவர்கள் கடந்துவிடுவர் போலத் தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Ukraine President Volodymyr Zelenskyy, addressing the 80th UNGA General Debate, "Russia abducted thousands of Ukrainian children, and we have managed to bring some of them back.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் குறைதீா் கூட்டத்தில் 32 மனுக்கள்

பாலாற்றில் நீா்வரத்து வேண்டி காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

சோளிங்கா் மலையில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஒத்திகை

புதுகை மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேருக்கு தமிழக அரசு விருது

பொதுக்கூட்ட அனுமதிக்கு முன்வைப்புத் தொகை குறித்து விதிமுறைகள் வகுக்க அரசுக்கு அவகாசம்: தவெக வழக்கில் உத்தரவு

SCROLL FOR NEXT