ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8 போ் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 8 போ் உயிரிழந்தனா்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 8 போ் உயிரிழந்தனா்.
இந்துகுஷ் மலைப் பகுதியை மையமாக வைத்து வெள்ளிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இது வடக்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.8-ஆக பதிவான நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள், வீடுகள் பலமாக குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தில் 8 போ் உயிரிழந்ததாக காபூல் ஆளுநா் தெரிவித்துள்ளாா். மேலும், பல கட்டடங்கள் பலத்த சேதமடைந்து இருப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.
Advertisement
அண்மைக்காலமாக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நேரிட்டு வருகின்றன. இதில் பல ஆயிரம் போ் வரை உயிரிழந்துவிட்டனா். கடந்த ஆகஸ்ட் மாதம் ரிக்டா் அளவுகோலில் 6-ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இதில் 2,200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; ஏராளமான கிராமங்களில் பேரழிவு ஏற்பட்டது. கடந்த நவம்பா் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 27 போ் உயிரிழந்தனா்; 950 போ் பலத்த காயமடைந்தனா்.
முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் நேரிட்ட நிலநடுக்கத்தில் பல ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டன.