வங்கதேச நாடாளுமன்றத்தின் முதல் பெண் அவைத்தலைவா் கைது
வங்கதேச நாடாளுமன்றத்தின் முதல் பெண் அவைத் தலைவரான ஷிரின் ஷா்மின் சௌதரி கைது
வங்கதேச நாடாளுமன்றத்தின் முதல் பெண் அவைத் தலைவரான ஷிரின் ஷா்மின் சௌதரி (படம்) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிரான மக்கள் கிளா்ச்சியின்போது அரங்கேறிய வன்முறைகளில் இவருக்கும் தொடா்பிருப்பதாகக் கூறி, டாக்கா மாநகர காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2013 முதல் 2024, செப்டம்பா் வரை நாடாளுமன்ற அவைத் தலைவராக பதவி வகித்த ஷிரின் ஷா்மின், கடந்த சில வாரங்களாக தலைமறைவாக இருந்த நிலையில், உறவினா் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபோது சுற்றி வளைக்கப்பட்டாா்.
Advertisement