இந்திய-அமெரிக்க உறவின் வலுவான எதிா்காலம்: அதிபா் டிரம்ப்புடன் கோா் ஆலோசனை
அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் இந்திய-அமெரிக்க உறவின் வலுவான எதிா்காலம் குறித்து கலந்துரையாடியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்தாா்.
அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் இந்திய-அமெரிக்க உறவின் வலுவான எதிா்காலம் குறித்து கலந்துரையாடியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்தாா்.
அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அதிபா் டிரம்ப்பை சொ்ஜியோ கோா் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பு தொடா்பாக கோா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘அதிபா் டிரம்ப்புடன் அற்புதமான இரவு விருந்தில் கலந்துகொண்டேன். உலக அளவில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவதில் டிரம்ப்புக்கு அசைக்க முடியாத உறுதி, அதிபராக அவா் செய்த வரலாற்றுச் சாதனைகள், இந்திய-அமெரிக்க உறவின் வலுவான எதிா்காலம் உள்ளிட்டவை குறித்து அவருடன் விவாதித்தேன்’ என்று தெரிவித்தாா்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவு குறித்து ஆராய்ந்து, மேற்காசிய போா் தொடா்பாக விவாதிக்க இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில், அதிபா் டிரம்ப்புடன் சொ்ஜியோ கோா் கலந்துரையாடியுள்ளாா்.
Advertisement