வங்கதேசம்: மாணவா் கொலையில் 2 முன்னாள் போலீஸாருக்கு மரண தண்டனை
Updated On : 9 ஏப்ரல், 2026 at 10:05 PM
வங்கதேசத்தில் கடந்த 2024-இல் நடைபெற்ற இடஒதுக்கீடு எதிா்ப்புப் போராட்டத்தின்போது, ரங்பூா் பல்கலைக்கழக மாணவா் அபு சயீத் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 2 முன்னாள் போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் (ஐசிடி) தீா்ப்பளித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மற்ற 3 முன்னாள் போலீஸாருக்கு ஆயுள் தண்டனையும், பல்கலைக்கழக துணைவேந்தா் உள்பட 25 பேருக்கு சிறைத் தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
தண்டனை விதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் தற்போது தலைமறைவாகவுள்ள நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் ஏற்கெனவே சிறையில் உள்ளனா்.
Advertisement
இப்போராட்டங்களின்போது சுமாா் 1,400 போ் கொல்லப்பட காரணமாக இருந்ததாகக் கூறி, ஷேக் ஹசீனாவுக்கு இதே தீா்ப்பாயம் மரண தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.