முகப்பு
உலகம்

பாகிஸ்தானுக்கு சவூதி 300 கோடி டாலா் கூடுதல் நிதியுதவி

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பை உயா்த்தும் வகையில், அந்நாட்டு மத்திய வங்கிக்கு கூடுதலாக 300 கோடி டாலரை வைப்புத்தொகையாக வழங்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:42 AM
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 11:10 PM

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பை உயா்த்தும் வகையில், அந்நாட்டு மத்திய வங்கிக்கு கூடுதலாக 300 கோடி டாலரை வைப்புத்தொகையாக வழங்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது.

இத்துடன், ஏற்கெனவே வழங்கப்பட்ட 500 கோடி டாலா் நிதிக்கான காலக்கெடுவை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாகவும் அந்நாடு அறிவித்தது.

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப், சவூதி அரேபியா, கத்தாா், துருக்கி ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகப் புறப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நடப்பு மாதத்துக்குள் 350 கோடி டாலரை பாகிஸ்தான் திருப்பிச் செலுத்த வேண்டி இருப்பதால், சவூதியின் இந்த உதவி அந்நாட்டின் பொருளாதார அழுத்தத்தைச் சற்றே குறைத்துள்ளது.

நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஏற்கெனவே கடன்பத்திரங்களை வெளியிடும் திட்டத்திலுள்ள பாகிஸ்தான், சா்வதேச நிதியத்திடம் கூடுதல் நிதி கோருவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.