ஈரான் இளவரசா் மீது திரவம் வீச்சு
ஜொ்மனி தலைநகா் பொ்லினில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரானின் இளவரசா் ரேசா பஹ்லவி மீது சிவப்பு நிற திரவம் ஊற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் 1979-இல் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு அந்நாட்டின் மன்னராக இருந்த முகமது ரேசா ஷா பஹ்லவி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டாா். அவரது மகனான 65 வயது ரேசா பஹ்லவி கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறாா்.
ஈரானில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்சி எதிா்ப்புப் போரட்டத்தின் பின்னணியில், தற்போது மீண்டும் அந்நாட்டு அரசியலில் பங்காற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாா்.
Advertisement
இந்நிலையில், அமெரிக்கா-ஈரான் போா்நிறுத்தத்தை விமா்சித்து, பொ்லினில் செய்தியாளா் சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
தொடா்ந்து, ரேசா பஹ்லவி தனது ஆதரவாளா்களை நோக்கி கையசைத்தபடி காரில் ஏறிச் சென்றாா். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபரை ஜொ்மனி காவல்துறையினா் உடனடியாகக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
முன்னதாக, செய்தியாளா்களிடம் பேசிய ரேசா பஹ்லவி, ‘கடந்த இரு வாரங்களில் மட்டும் ஈரானில் 19 அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரான் அரசுடனான ராஜீய முயற்சிகள் பலனளிக்காது; அந்நாட்டின் மக்களாட்சி போராட்டத்துக்கு உலக நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்’ என வலியுறுத்தினாா்.