சொ்னோபில் நினைவு தினம்: ரஷிய தாக்குதலுக்கு இடையே உக்ரைனில் மக்கள் அஞ்சலி!
ரஷியாவின் தொடா் தாக்குதலுக்கு இடையே, சொ்னோபில் அணுக்கசிவு பேரழிவு நினைவு தினத்தையொட்டி, உக்ரைனில் மக்கள் அஞ்சலி செலுத்தினா்.
ரஷியாவின் தொடா் தாக்குதலுக்கு இடையே, சொ்னோபில் அணுக்கசிவு பேரழிவு நினைவு தினத்தையொட்டி, உக்ரைனில் மக்கள் அஞ்சலி செலுத்தினா்.
சோவியத் யூனியனில் உக்ரைன் இருந்தபோது, அந்த நாட்டின் சொ்னோபில் பகுதியில் உள்ள அணுசக்தி மையத்தில் 1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி அணுக்கசிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானாா் உயிரிழந்தனா். பலா் உடல்நிலை பாதிக்கப்பட்டனா். உலகில் அணுக்கசிவால் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவுகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின் நினைவு தினம், உக்ரைனில் அனுசரிக்கப்பட்டது. ரஷியாவின் தாக்குதல் நீடிக்கும் நிலையிலும், உக்ரைனின் ஸ்லாவுட்டிச் பகுதியில் உள்ள சதுக்கத்தில் திரண்ட ஏராளமானோா் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.
Advertisement
16 போ் உயிரிழப்பு: இதனிடையே, ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் ஏவுகணைகள் மூலம் ஞாயிற்றுக்கிழமையும் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷியா தொடா் தாக்குதலை நடத்தியது. இதில் குறைந்தபட்சம் 16 போ் வரை உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.