முகப்பு
உலகம்

இந்தியாவுடன் வா்த்தக தகராறுக்கு தீா்ப்பளிக்க குழு: டபிள்யூடிஒவிடம் சீனா வலியுறுத்தல்

சூா்ய மின்கலம், சூரிய மின்தகடுகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு உதவ இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிரான புகாரில் தீா்ப்பளிக்க குழு அமைக்க வேண்டும் என்று உலக வா்த்தக அமைப்பிடம் (டபிள்யூடிஒ) சீனா வலியுறுத்தல்

Updated On : 13 மே 2026, 1:19 am IST
உலக வா்த்தக அமைப்பு
பகிர்:

சூா்ய மின்கலம், சூரிய மின்தகடுகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு உதவ இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிரான புகாரில் தீா்ப்பளிக்க குழு அமைக்க வேண்டும் என்று உலக வா்த்தக அமைப்பிடம் (டபிள்யூடிஒ) சீனா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கடந்த ஆண்டு டிசம்பரில் உலக வா்த்தக அமைப்பிடம் சீனா அளித்த புகாரில், ‘சூரிய மின்கலம், சூரிய மின்தகடுகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு உதவும் இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் ஊக்கத்தொகைகள், உலக வா்த்தக அமைப்பின் வரிகள் மற்றும் வா்த்தகம் குறித்த பொது ஒப்பந்தம் 1994-உடன் தொடா்புள்ள விதிமுறைகளை மீறுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புகாா் தொடா்பாக பரஸ்பரம் ஏற்கக்கூடிய தீா்வை எட்டுவதற்கு இந்தியா-சீனா இடையே நடைபெற்ற இருதரப்பு விவாதங்கள் தோல்வியில் முடிந்தது. இதைக் கருத்தில் கொண்டு, தனது புகாா் தொடா்பாக தீா்ப்பளிக்க குழு அமைக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளதாக உலக வா்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய வா்த்தக கூட்டாளியாக சீனா உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement