முகப்பு
உலகம்

நிலமிழந்த காஸா விவசாயிகள் புரட்சி! டின்களில் காய்கறி செடிகள் வளர்த்து சாதனை

நிலமிழந்த காஸா விவசாயிகள் புரட்சி படைத்து, டின்களில் காய்கறி செடிகள் வைத்து சாகுபடி

செடி வளர்ப்பு - பிரதி படம் - Center-Center-Bangalore
பகிர்:

கடுமையான போரால் நிலங்களை இழந்த விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். காலியான தகர டின்களில் காய்கறிச் செடிகளை வளர்த்து சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போரின்போது, உணவுப் பொருள்கள் வந்து காலியான டின்களை பழைய இரும்புச் சாமான் கடைக்குப் போட்டு பேரீட்சம் பழம் வாங்கி சாப்பிட்டுவிடாமல், அதைக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டுள்ளனர்.

விவசாயிகளின் பெருமைகளைப் பேச மறந்தாலும், அவர்களது வாழ்வு என்றுமே மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவே திகழ்ந்து வருகிறது.

Advertisement

Advertisement

அந்த வகையில்தான், தென்கிழக்கு காஸா நகரில், பாலஸ்தீனிய விவசாயிகள், தங்களுக்கு உதவிப் பொருள்கள் வந்து காலியான டின்களில் மண்ணை நிரப்பி அதில் காய்கறிச் செடிகளை பயிரிட்டனர்.

கீரைகள், புதினா, காய்கறிகளை நடவு செய்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார்கள். தங்களது நிலங்கள் போரால் மோசமாக சீர்குலைந்து போன நிலையில், அவற்றை மீண்டும் சீரமைக்கும் வசதிகள் இல்லாதது கவலை அளித்தது. அதே வேளையில், மாற்று வழியை சிந்தித்த போது கிடைத்ததுதான் இந்த உக்தி.

தங்களது முகாம்கள் இருக்கும் இடங்களுக்கு அருகே டின்களை அடுக்கி காய்கறிகளை வளர்த்து வருகிறோம், விவசாயப் பணிகளின்போது திடீரென தாக்குதல் நடக்கும். அப்போது சென்று மறைந்துகொள்வோம். தாக்குதல் சப்தம் நின்றதும் மீண்டும் பணிகளை தொடங்குகிறோம் என்கிறார்கள்.

summary

Land-locked Gaza farmers revolt! Record-breaking vegetable plants in tins

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.