குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

'சூரரைப் போற்று' படத்துக்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான உயரிய விருது

'சூரரைப் போற்று' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா அறிவித்துள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 3:09 pm IST

'சூரரைப் போற்று' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா அறிவித்துள்ளது.  

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. 

இந்தப் படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது.

குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் என்ற கொள்கைக்கு உயிர்கொடுத்த ஏர் டெக்கான் நிறுவன தலைவர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக சூரரைப் போற்று உருவாகியிருந்தது.

இந்த நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகர் சூரரைப் போற்று படம் திரையிடப்பட்டது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது மற்றும் சிறந்த படத்துக்கான விருதும் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் சூர்யாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனையடுத்து டிவிட்டரில் சூரரைப் போற்று என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.