பிரபல நடிகையின் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டதாக புகார்

நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் லட்சக்கணக்கான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
பிரபல நடிகையின் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டதாக புகார்

நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் லட்சக்கணக்கான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன், நிமிர் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி நாயர். இவர் தற்போது வைபவுடன் இணைந்து ஆலம்பனா படத்தில் நாயகியாக நடித்துள்ளார். 

இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்துவருகிறார். இவரது வீட்டில் இரண்டு ஆண்டுகளாக வேலை செய்தவர் ரூ.9 லட்சம் விலையுல்ல இரண்டு கைக்கடிகாரங்கள், 50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், செல்போன் போன்ற பொருட்களைத் திருடி சென்றதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தற்போது அவரது புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com