இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த படத்துக்காக பிரபல ஹீரோவிடம் கதை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் கடைசியாக இயக்கிய ஸ்பைடர், சர்கார், தர்பார் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு படத்தை இயக்கவிருந்தார்.
திடீரென அந்தப் படம் கைவிடப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸிற்கு பதிலாக நெல்சன் திலீப்குமார் விஜய்யை பீஸ்ட் படத்தை இயக்கினார். ஆனாலும் நெல்சன் இயக்கிய படமும் ரசிகர்களைக் கவரவில்லை.
இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்தப் படத்துக்காக சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம். விஜய்க்காக அவர் எழுதிய கதையை தற்போது சிம்புவுக்கு ஏற்றார் போல மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் இயக்குநர் சுதா கொங்கராவும் சிம்புவுக்கு ஒரு கதை சொல்லியுள்ளாராம். சிம்பு என்ன முடிவெடுக்கப்போகிறார் என திரையுலகினர் எதிர்பார்த்துக்காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார்: மகளிர் ரயில் பெட்டியில் ஆண் சடலம் கண்டெடுப்பு!

”விஜய்னு சொல்லாதீங்க! CM-னு சொல்லுங்க!” துணைப் பேரவைத் தலைவர் ரவிசங்கர்

வேட்டுவம் என் மிகச்சிறந்த நடிப்பாக இருக்கும்: சோபிதா துலிபாலா

திருநாகேஸ்வரம் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கோலாகலம்
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



