உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் குறித்த தகவல்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த படத்துக்காக பிரபல ஹீரோவிடம் கதை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Published On :1 பிப்ரவரி 2024, 4:07 pm IST

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த படத்துக்காக பிரபல ஹீரோவிடம் கதை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் கடைசியாக இயக்கிய ஸ்பைடர், சர்கார், தர்பார் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு படத்தை இயக்கவிருந்தார். 

திடீரென அந்தப் படம் கைவிடப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸிற்கு பதிலாக நெல்சன் திலீப்குமார் விஜய்யை பீஸ்ட் படத்தை இயக்கினார். ஆனாலும் நெல்சன் இயக்கிய படமும் ரசிகர்களைக் கவரவில்லை. 

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்தப் படத்துக்காக சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம். விஜய்க்காக அவர் எழுதிய கதையை தற்போது சிம்புவுக்கு ஏற்றார் போல மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் இயக்குநர் சுதா கொங்கராவும் சிம்புவுக்கு ஒரு கதை சொல்லியுள்ளாராம். சிம்பு என்ன முடிவெடுக்கப்போகிறார் என திரையுலகினர் எதிர்பார்த்துக்காத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.