மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.
சமீபத்தில் தனது 8ஆவது படத்தின் பெயரை அறிவித்தார். ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.
அவரே தயாரித்து இயக்கி நடிக்கும் இந்தப் படத்துக்கு, “கடைசி உலகப் போர்” எனப் பெயரிட்டது. இதன் முதல் பார்வை போஸ்டர் முதல் கிளிம்ஸ் விடியோவரை அனைத்தும் கவனம் ஈர்த்தது.
இந்தப் படம் செப். 20 ஆம் தேதி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதன் இரண்டாம் பாகம் வருமென சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி உறுதிசெய்தார்.
இந்நிலையில் ஹிந்தியிலும் டப் செய்து வரும் அக்.4ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் ஹிந்தி டிரைலரை நடிகை தமன்னா வெளியிட்டு வாழ்த்தினார்.
தமன்னா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
கடைசி உலகப் போர் ஹிந்தியில் அக்.4ஆம் தேதி வெளியாவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. ஆதியின் கனவுக்கு உயிர்கொடுப்பதில் அவர் பக்கம் நிற்பதில் பெருமை கொள்கிறேன். மகாராஜாவில் சிறப்பாக நடித்த நட்டி நடராஜ் போர் குறித்த பாதிப்பை ஏற்படுத்தும் கருத்தினை கூறியுள்ளார். இந்த உலகத்தில் அமைதியே எல்லவற்றையும்விட மிகவும் முக்கியமானது.
படக்குழுவுக்கு வாழ்த்துகள் என்றார்.
ð¥ Happy to announce!!! Last World War [Hindi] - Coming to cinemas on 4th October!!!
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) October 1, 2024
⨠Watch the trailer here: https://t.co/MiTP3yN4WC
I am proud to stand with Adhi as he brings this vision to life. After the extraordinary performance of #Maharaja, #Nattinatraj is all set toâ¦
நடிகை தமன்னா தற்போது2 ஹிந்திப் படங்கள்,ஒடேலா 2 என்ற தெலுங்குப் படத்திலும் நடிக்கிறார்.
ஒடேலா முதல் பாகம் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு உருவாகிய த்ரில்லர் படம் ஆஹா ஓடிடியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. அசோக் தேஜா இயக்குகிறார்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு வெளியான தமன்னாவின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தைகள், முதியவர்களுக்கு இலவச மருத்துவம் செய்யும் கிராமத்து மருத்துவர்!

1971 இந்தியா - பாகிஸ்தான் போர் நாயகன் வசந்த் குமார் பொன்வார் காலமானார்!

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு: ஹிப் ஹாப் ஆதி

வெளியானது அடி போடி பாடல்!
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |



