நடிகர் நானி மெய்யழகன் திரைப்படத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் நடிகர் நானி நடித்த ஹிட் 3 திரைப்படம் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் டிரைலர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதால் இப்படம் கண்டிப்பாக ரசிகர்களைக் கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இதற்கான புரமோஷன்களில் நானி பங்கேற்று வருகிறார். அப்படி, நேர்காணல் ஒன்றில் பேசியவர், “கடந்த 10 ஆண்டுகளில் நான் பார்த்த திரைப்படங்களில் சிறந்த படமென்றால் மெய்யழகன்தான்.பல இடங்களில் நெகிழ்ந்துவிட்டேன். அப்படம் ஒரு மேஜிக்போல் நிகழ்ந்துவிட்டது. ரூ. 1000 கோடி பட்ஜெட் இருந்தாலும் இப்படிப்பட்ட படத்தை எடுக்க முடியாது.
தனிப்பட்ட முறையில் மிக நெருக்கமான படம். இப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் கார்த்தியிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பிரேம் குமார் காலத்தால் அழியாத கிளாசிக்கை உருவாக்கிவிட்டார்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலன் மிகச்சிறந்த மலையாளத் திரைப்படம்: இயக்குநர் பிரியதர்ஷன்
நடிகர் கார்த்தியின் மார்ஷல் போஸ்டர்!
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!

சும்மா தெறிக்குது... கருப்பைப் பாராட்டிய கார்த்தி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



