சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

அண்ணா தொடரில் இணையும் சின்ன மருமகள் நடிகை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அண்ணா தொடரில் சின்ன திரை நடிகை சோஃபியா இணையவுள்ளார்.

News image

சோஃபியா - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :23 ஜூன் 2025, 4:25 pm IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அண்ணா தொடரில் சின்ன திரை நடிகை சோஃபியா இணையவுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சின்ன மருமகள் தொடரில் சோஃபியா நடித்து வரும் நிலையில், புதிய தொடரிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2023 மே மாதம் முதல் அண்ணா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் - வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் இத்தொடர், உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் எடுக்கப்பட்டு வருகிறது.

அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில், நடிகை நித்யா ராம், பூவிலங்கு மோகன், ரோசரி, சுபிக்‌ஷா, பிரீதா, ஹேமா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சோஃபியா

சோஃபியா - இன்ஸ்டாகிராம்

தற்போது சின்ன மருமகள் தொடரில் நடித்து வந்த நடிகையும் விளம்பர மாடலுமான சோஃபியா, அண்ணா தொடரில் நடிக்கவுள்ளார். இவரின் வருகையால் தொடரில் புதிய எதிர்பார்ப்புகளும், கணிக்க முடியாத திருப்பங்களும் ஏற்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விளம்பர மாடலாக இருந்த சோஃபியா, நடிப்புத் துறையில் மெல்ல மெல்ல கால் பதித்து வருவதால், அண்ணா தொடர் அவரின் நடிப்புக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.