நடிகர் தனுஷின் 55-வது திரைப்படம் உளவுக்கதையாக உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தன் 55-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தனுஷே தயாரிக்கவும் செய்வதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதில் வில்லனாக நடிகர் மம்மூட்டியும் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலாவும் நடிக்கின்றனர். மம்மூட்டி காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் தனுஷ் உளவாளியாக நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. த்ரில்லர் கதையாக உருவாகும் இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து, தனுஷ் அடுத்ததாக லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
Actor Dhanush's 55th film is reportedly being developed as a spy story.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








